எரியாத தெருவிளக்குகள்

Update: 2024-03-24 11:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு மேலவட்டம் கணபதி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக சாலையோரம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரிவது இல்லை. மேலும் இந்த தெருவிளக்குகளை ஆன் செய்யும் சுவிட் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்