அந்தரத்தில் தொங்கும் உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-03-10 16:45 GMT
சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்கு கடந்த ஓராண்டாக அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளிக்கிறது.. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். மேலும் மின்விளக்கு எரியாததால் இரவு நேரத்தில் அங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்