தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2024-03-10 12:23 GMT

சரவணம்பட்டி, விசுவாசபுரம், காபி கடை, குரும்பபாளையம் பகுதியில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கிறது. ஆனால் இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. குறிப்பாக சாலையோரத்தில் உள்ள குழிகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால் அதில் விழுந்து படுகாயம் அடைகிறார்கள். மேலும் அந்த சாலையில் உள்ள தெருவிளக்குகளும் சரியாக ஒளிர்வதில்லை. இதன்காரணாக சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதோடு, மின்விளக்குகளையும் ஒளிரச்செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்