ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-03-10 12:07 GMT

கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கடம்ங்குறிச்சி செல்லும் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது, முறிந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்