சென்னை சூளைமேடு, வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில் குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், இதனை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெரு விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.