தெருவிளக்குகள் இல்லை

Update: 2024-02-25 12:13 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சி நொய்யல் ஆற்றுப்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் இருபுறமும் மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. ஆனால், தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பாலம் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்