மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2024-02-25 11:50 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரிதெரு அருகே ஆஸ்பத்திரி தெரு சாலையில் மின்விளக்குகள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்