இரும்பு கடைக்கு வந்த அரசு மின்கம்பிகள்

Update: 2024-02-11 14:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கொடிக்குளம் பகுதியில் துணை மின்சார வாரியம் உள்ளது. இந்த மின்வாரியத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் பழைய பாலடைந்த கட்டிடங்கள் இருந்தன. அதனை சில நாட்களுக்கு முன்பு மின்சார வாரியத்தினர் இடித்து அகற்றினர். இந்நிலையில் இந்த மின்சார வாரியத்தில் உள்ள மின் கம்பிகள் கோட்டைப்பட்டினம் தர்கா அருகே உள்ள பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மின்சார வாரியத்திற்கு சொந்தமான கம்பிகள் எவ்வாறு பழைய இரும்பு கடைக்கு வந்தது. இதனை யார் கொண்டு வந்து விற்பனை செய்தது. விற்பனை செய்த நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்