தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2024-02-11 12:32 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காடாம்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் தெருவிளக்குகளே இல்லை. அங்கு ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் தெருவிளக்குகள் பொருத்தாமல் உள்ளனர். அந்த சாலையை இரவு நேரத்திலும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இருள் சூழ்ந்து கிடப்பதால், அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்