புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-02-11 11:49 GMT

பெரம்பலூர் வட்டம், செங்குணம் பாலாம்பாடி சாலையில் அண்ணா நகர் பகுதியில் மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் தாழ்வான நிலையில் காணப்படுகிறது. இதேபோல் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியின் நுழைவு வாயில் கிழக்கே மின் கம்பத்தில் இருந்து ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க கட்டிடத்திற்கு செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இதனை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்