ஆபத்தான.மின்கம்பம்

Update: 2024-02-04 17:44 GMT

அந்தியூர் தாலுகா பிரம்மதேசத்தில் அந்தியூர்-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் உள்ள பெத்தாரண்ணன் கோவில் பஸ் நிறுத்தத்தின் அருகே மின்கம்பம் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. தினமும் காலை, மாலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி சென்று வருகிறார்கள். ஏதாவது அசம்பாதவித சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்