ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-01-21 15:32 GMT
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் வீடுகளுக்கு மின்சார வினியோகம் செய்வதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டன. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்து நிற்பதால் அவை எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன் சேதமடைந்த மின்கம்பங்களைஅகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்