தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-01-21 13:20 GMT

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. மரக்கிளைகளுக்கு நடுவிலும் மின்கம்பிகள் செல்கின்றன. பலத்த காற்று வீசும் போது மரக்கிளைகள் மின்கம்பிகளுடன் உரசுவதால் மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகளவில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி வெளியாவதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட பகுதியில் ஆய்வு செய்து பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களா?


மேலும் செய்திகள்