தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-01-14 11:41 GMT

பெரம்பலூர் வட்டம், செங்குணம்-பாலாம்பாடி சாலையில் செங்குணம் அண்ணா நகர் பகுதியில் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வான நிலையில் காணப்படுகிறது. இதேபோல் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியின் நுழைவு வாயில் கிழக்கே உள்ள மின் கம்பத்தில் இருந்து ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டிடத்திற்கு செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்