ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-01-14 09:54 GMT

தஞ்சை மாநகராட்சி தொல்காப்பியர்சதுக்கத்தில் உள்ள உயர்மின்கோபுர விளக்கு கடந்த சில நாட்களாக ஒளிராமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எதிரே நடந்து வருபவர்கள், வாகனங்கள் வருவது தெரியாமல் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்