அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

Update: 2023-12-31 16:38 GMT

நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் ஊராட்சி வேட்டுவம்பாளையத்தில் சுமார் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொது மயானம் ஒன்று உள்ளது. இங்குள்ள எரிமேடையை தான் இறந்தவர்களின் உடலை எரிக்க அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மயானத்தில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை. மேலும் தண்ணீர் வசதியும் இல்லை. எனவே மயானத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்