மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகள்

Update: 2023-12-17 10:52 GMT

திருச்சி மாவட்டம் சீரங்கம் வட்டம் நாச்சிக்குறிச்சி கிராமம் வாசன் நகர் 1-வது விரிவாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அருகில் வேப்பமரம் ஒன்று வளர்ந்துள்ளது. இந்த மரத்தின் கிளைகள் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் மீதும் உரசியவாறு உள்ளது. இதனால் மரத்தின் அருகே செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்கடைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்