கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் சாலையில் உள்ள தெருமின்விளக்கு எரியாமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெறும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தெருமின்விளக்கை சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.
