திறந்த நிலையில் மின்சாதனப்பெட்டி

Update: 2023-12-10 14:33 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன்அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகே மின்சாதனப்பெட்டி ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திறந்தநிலையில் இருக்கும் மின்சாதனப்பெட்டியினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவிகளின் நலன் கருதி திறந்த நிலையில் இருக்கும் மின்சாதனப்பெட்டியை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்