எரியாத தெருவிளக்குகளால் அவதி

Update: 2023-12-03 10:00 GMT
கூடலூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் தெரு விளக்குகள் பல வாரங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் இருளில் அச்சத்துடன் பெண்கள் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் காட்டு பன்றி மற்றும் யானைகள் ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இரவில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபா, கூடலூர்

மேலும் செய்திகள்