எரியாத தெரு விளக்குகள்

Update: 2023-11-26 12:57 GMT

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொன் நகர் எல்லையம்மன் கோவில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள 2 தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால், சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்