திறந்து கிடக்கும் மின்சார பெட்டி

Update: 2023-11-19 17:02 GMT

நாமக்கல்லில் சேலம் சாலையில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அமைந்து உள்ளது. இந்த சங்கத்திற்கு எதிரில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரத்தில் மின்சார பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டி திறந்த நிலையில், ஒயர்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் தெரியும் வகையில் உள்ளன. இதனால் மழை காலங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மின்சார பெட்டியை சீரமைத்து மூடி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்