மின்விளக்குகள் தேவை

Update: 2023-11-19 11:14 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சிவவிடுதி ஊராட்சி கிழக்கு தெருவில் மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வந்தனர். இந்த நிலையில் தற்போது மின்கம்பத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அகற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மீண்டும் மின்விளக்குகள் பொருத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்