ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-29 17:32 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பழையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் விழுந்து, அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி வளாகத்தின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிய நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்