மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-10-29 17:18 GMT

திருச்சி- விராலிமலை வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புங்கனூர் ஆலம்பட்டி பிரிவு ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் செயின் பறிப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்