மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-29 11:51 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சி தெற்கு தெருவில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் மற்றும் மேற்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் பலத்த காற்று வீசும் போது சாய்ந்து விழுந்து விடும் சூழல் நிலவி வருகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்