தெருமின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-10-22 16:52 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் அருகே ரோடுமாமந்தூரில் உள்ள சாய் நகரில் தெருமின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் புதிதாக தெருமின்விளக்கு அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்