தெருவிளக்கு வசதி தேவை

Update: 2023-10-22 09:48 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரம் கச்சனம் ஊராட்சிக்குட்பட்ட விளத்தூர்காலனி தெருவுக்கு முறையான தெருவிளக்கு மற்றும் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் சென்று வரும் சூழல் நிலவுகிறது. சாலை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்