தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-10-08 13:48 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்கு வசதியை ஏற்படுத்துவதோடு வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்