அகற்றப்படாத மரக்கிளைகள்

Update: 2023-10-08 13:40 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் கம்பங்களின் அருகில் ஏராளமான மரங்கள் வளர்ந்து மின் கம்பிகளில் அதன் கிளைகள் உரசிக்கொண்டு உள்ளன. இதனால் மழை காலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மின் கம்பங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டால் இப்பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடையும் நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்