இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-10-04 17:39 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் அருகே மாமந்தூரில் உள்ள சாய் நகரில் பெரும்பாலான இடங்களில் தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதி சாலை இருளில் மூழ்கி கிடப்பதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்