சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-10-04 14:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திரிசூலம் பெரியார் நகர் 2-வது குறுக்கு தெரு பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த மழை அல்லது காற்று வீசும் போது மின்கம்பம் சாய்ந்து விழக்கூடிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்