ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-10-04 12:14 GMT

கோவை சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அருகே தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. மேலும் மதுப்பிரியர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அதோடு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் இருந்தாலும் தெரிவது இல்லை. இதன் காரணமாக அந்த வழியாக குழந்தைகள், பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை சரி செய்து மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்