சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-10-01 13:26 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மூணாம்சேத்தி சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் நிற்கிறது. பலத்த மழை அல்லது காற்று வீசும் போது மின்கம்பம் சாய்ந்து விழக்கூடிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மின்கம்பத்தையொட்டி மரக்கிளைகளும் அடந்து வளர்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்