ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-10-01 10:30 GMT

கோவை பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் அருகே கட்டபொம்மன் வீதி 2-வது தெருவில் தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் தயங்குகின்றனர். எனவே அங்கு பழுதடைந்து உள்ள தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்