மின்விபத்து அபாயம்

Update: 2023-09-27 17:54 GMT
திருக்கோவிலூர் அருகே கீழத்தாழனூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளின் மாடியில் உரசியபடி மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் வீட்டின் மாடியில் கட்டை அமைத்து கம்பி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பலத்த காற்று வீசினால் அந்த கட்டை உடைந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே இதில் தலையிட்டு மின்கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்