விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் தெரு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி நடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.