கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் நரசிங்கநல்லூர் கிராமத்தில் வார்டு எண்:1-ல் மின்கம்பங்களில் மின் விளக்குகள் பழுதடைந்தும், ஒரு சில கம்பங்களில் மின் விளக்குகள் இல்லாமலேயே உள்ளது. இரவில் தெருமுழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தெரு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, புதுப்பாளையம்.