ராணிப்பேட்டையில் காரை கூட்ரோடு பகுதியில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நவல்பூர் செல்லும் சர்வீஸ் சாலையில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால், அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
-பாஸ்கரன், ராணிப்பேட்டை.