பகலில் எரியும் உயர்கோபுர மின்விளக்குகள்

Update: 2023-07-19 16:45 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது வெறையூர் கிராமம். அந்தக் கிராமத்தில் இரவில் போடப்படும் மின்விளக்குகள் காலை விடிந்ததும் அணைப்பது இல்லை. பகலிலும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. பகலில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதால் அடிக்கடி பழுதாகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் மின் விளக்குகளை அதிகாலை நேரத்தில் நிறுத்த வேண்டும்.

-சிவா, வெறையூர்.

மேலும் செய்திகள்