வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளியில் உள்ள அரசு பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இதன் அருகே 3 சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்தச் சாலைகளில் தினமும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரவில் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் பெண்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே தண்ணீர்தொட்டி பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆல்பா்ட், ேவலூா்