இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2026-03-08 16:41 GMT
அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டி பெருமாள் கோவில் அருகே மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நிறுவ மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்