திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவுக்குட்பட்ட முக்கொம்பு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரம் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.