திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் அகத்திய நகர் 2-வது தெருவில் மின் கம்பத்தில் உள்ள வயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ளது. இதனால் காற்று பலமாக வீசும்போது ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி வருகிறது.இந்த பகுதியில் சிறுவர்கள் அருகில் விளையாடுவார்கள். பொதுமக்கள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.