சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2024-07-07 19:30 GMT

காட்பாடி காங்கேயநல்லூர் இந்திரா நகர் பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அங்குள்ள விளை நிலத்தில் இரும்பு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக நிற்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாய்வாக இருக்கும் மின் கம்பத்தை சரி செய்து நேராக நிமிர்த்தி நட வேண்டும்.

-கஜேந்திரன், காட்பாடி.

மேலும் செய்திகள்