பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-09-17 13:12 GMT

ராணிப்பேட்டை-திருவண்ணாமலை என 2 மாவட்டங்களை இணைக்கும் பாலம் வாழைப்பந்தல் அருகே கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக வாழப்பந்தல் மன்னார்சாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் பாலத்தின் மேலே பொதுமக்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளது. அங்கே பாலத்தின் மத்தியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. ஆகவே இப்பாலத்தில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

-ராஜேந்திரன், வாழைப்பந்தல்.

மேலும் செய்திகள்