மின் விளக்கு வசதி தேவை

Update: 2025-06-08 18:29 GMT

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஆரணி-வேலூர் சாலையில் இருந்து கிராமத்துக்குச் செல்லக்கூடிய ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்தாமல் விட்டு விட்டனர். மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தவாறும் உள்ளன. இரவில் மின் விளக்கு வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். உடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்களை அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆ.கண்ணதாசன். அக்ராபாளையம்.

மேலும் செய்திகள்