பகலில் எரியும் மின்விளக்குகள்

Update: 2023-06-18 13:45 GMT

வெறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலை, திருக்கோவிலூர் சாலை, அண்டம்பள்ளம் சாலை, காவல் நிலைய வளாகம், பஸ் நிறுத்தம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள தெருக்கள் மட்டுமின்றி சாலை ஓரங்களில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக பகலிலும் எரிந்து கொண்டு உள்ளது. அங்குள்ள உயர் கோபுர மின்விளக்குகளும் பகலில் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-நாதன், வெறையூர்.

மேலும் செய்திகள்