தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-30 09:11 GMT


செய்யாறு அருகே உள்ள பெருங்களத்தூர் ஊராட்சி வன்னியந்தாங்கல் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. குறிப்பாக நெடும்பிறை சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஒரு மாத காலமாக மின்விளக்கு எரியாமல் இரவில் இருபள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்தப்பகுதியில் சாலையில் வேகத்தடை உள்ளதால் இரவில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய வெண்டும்.


மேலும் செய்திகள்