சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

Update: 2022-10-19 13:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஏரிக்கரை தெருவில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி வாழ் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் மழைக்காலம் தொடங்கியதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சாய்ந்துள்ள மின் கம்பத்தை மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

-பானு, பாணாவரம்.

மேலும் செய்திகள்